கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, திருகோணமலை பகுதியில் வைத்து 22 வயதான இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கடந்த 14ம் திகதி இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Post

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குவார்

Sat Sep 25 , 2021
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குவார் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மக்கள் சுகாதார வழிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடித்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். புத்தாண்டு உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார், அவ்வாறு இல்லையெனில் கொரோனா அலைகள் மீண்டும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu