நாளை (1ம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பஸ்களை அரசியல் கட்சிகள் கோரியுள்ள நிலையில் நேற்று (29ம் திகதி) மாலை வரை இருநூறு பஸ்களுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சமகி ஜன பலவேகய, தேசிய ஜன பலவேகய மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேருந்துகளை கோரியுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன.இதில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகளுக்கான கோரிக்கை கிடைத்துள்ளது. இந்த பேருந்துகளை வழங்கும்போது, அரசு சுற்றறிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவிக்கையில் : பஸ்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். முழுத் தொகையும் செலுத்தாமல் ஒரு பேருந்து கூட தரப்படாது என்றார்