இப்போது மாஸ் படங்களில் நடிக்க ஆசை வந்திருக்கு – ஜெயம் ரவி..!!

தனக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை வந்துள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

ஜெயம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தீபாவளி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.

கடந்த மாதம் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி கூறினார்.

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ப்ரியங்கா மோகனுக்கு ஜோடியாக ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் அக்டோபர் 31ம் திகதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஜெயம் ரவி ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் அளித்துள்ள நேர்காணலில், பரிசோதனை முயற்சிக்கான படங்களின் கோட்டா முடிந்துவிட்டது. தற்போது அதுபோன்ற படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை. இனிமேல் வந்தாலும் வரலாம்.

இப்போது எனக்கு மாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் வந்திருக்கிறது. இந்த மாஸ் ஆசை இப்போது வந்திருப்பது ஏன் என் தெரியவில்லை. அதற்கான வேலைகள் போய்க்கொண்டுள்ளன” என் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *