2025 ஆம் ஆண்டு மனித குலத்திற்கு பேரழிவு – பீதியை கிளப்பும் பாபா வங்கா கணிப்புகள்…!!

பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு முதல் மனித குலத்தின் வீழ்ச்சி தொடங்கும் என கூறியிருப்பது உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

1911 ஆம் ஆண்டு பல்கேரிய நாட்டில் பிறந்த தீர்க்கத்தரிசியான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பாபா வங்கா தன்னுடைய 12 வயதில் புயலில் சிக்கிய பின்னர் அவரது பார்வை பறிபோனதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. பாபா வங்காவின் கணிப்பின்படி , அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல், பிரிட்டன் இளவரசி டயானா மரணம், பிரிக்ஸிட் போன்ற பல முக்கிய சம்பவங்கள் பலித்துள்ளன.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாபா வங்காவின் கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2025ஆம் ஆண்டு முதல் உலகின் அழிவு தொடங்கும் என கணித்துள்ளார். 5079ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அப்போது பூமியில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளார்.

இந்நிலையில் 2025 ஆண்டு பல முக்கிய நாடுகளுக்குள் மோதல் வெடிக்கும் என்றும் அதிர்ச்சியளிக்கும் பல சம்பவங்கள் அரங்கேறும் என்றும் பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மனித குலத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில், மோதல் காரணமாக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். ஏற்கனவே பாபா வங்காவின் கணிப்புகள் பலித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *