விஜய்யை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு -மாஸ் கூட்டணி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த மாதம் கோட் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை வெங்கட் பிரபு இயக்க போகிறார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு இணையவிருக்கிறாராம். மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வேட்டையன் படம் வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய நிலையில், மற்றொரு படமும் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பண்ணி தரும்படி ரஜினியிடம் லைகா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்களாம்.

அதன்படி, லைகா – ரஜினிகாந்த் இணையும் அடுத்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு என்கின்றனர். இதுவரை ரஜினிகாந்த் – லைகா கூட்டணியில் 2.0, தர்பார், லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *