கணவனின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மனைவி பலி

எம்பிலிப்பிட்டி பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 45 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் இன்று (27) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Next Post

?யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதி பாதுகாப்பான குடிநீர் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது

Mon Sep 27 , 2021
?யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதியில் 24000m3 மூலம் 3 இலட்சம் மக்கள் (60,000 குடும்பங்களுக்கு) பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்புநீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்த திட்டம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu