எம்பிலிப்பிட்டி பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 45 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் இன்று (27) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.