இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி அது 4.4 சதவீத பொருளாதார வேகத்தை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட 6 சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக தீர்வு காண முடிந்தால்,Continue Reading

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு கேள்வி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய அரசாங்கமும் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை காரணமாகContinue Reading

இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்படத்திற்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் இலங்கை ரயில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில் திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக புதன்கிழமையிலிருந்து (09) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும்Continue Reading

இந்த வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த எதிர்பார்க்கைகளை விட இது இரட்டிப்பாகும். சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறைகளின் வலுவான செயற்றிறன் மூலம் இந்த வளர்ச்சி அடையப்படும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது. எனினும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி மீட்சி பலவீனமாக உள்ளது எனவும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்கொண்டு செல்லContinue Reading

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் லெபனானுக்கு வேலைக்காகச் சென்ற இலங்கையர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கால அவகாசம் எதிர்வரும் 08-01-2025ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் நிலையை சரிசெய்து கொள்ள முடியுமென வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.Continue Reading

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்களில் ரஷ்யா, பொதுநலவாய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றதுContinue Reading

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக , ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன்Continue Reading

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சட்டமா அதிபர் மற்றும் பதில் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவின் முன்மொழிவுகளை பரிசீலித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமாContinue Reading

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ வியாழக்கிழமை (10) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை அனுர அரசாங்கத்தில் பிரமராக ஹரிணி அமரசூரிய நிலையமிக்கப்பட்டுள்ள நிலையில், பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Continue Reading

நான்கு நட்சத்திர தரத்தைக்கொண்ட அமெரிக்க கடற்படை அட்மிரலும், அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராணுவ விஜயமாக இது அமைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான உறவை உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.Continue Reading