ஆபாச வீடியோ விவகாரத்தில் ஓவியா எடுத்த அதிரடி முடிவு – காவல்துறையில் பரபரப்பு புகார்!

டெக்னாலஜி வளர வளர அதன் மூலமாக நடக்கும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. சமீப காலமாக டெக்னாலஜி உதவியுடன் நடிகைகள் பெயரில் ஆபாசமான போலி வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. அந்த வகையில் நடிகை ஓவியா பெயரில் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வந்தன.

இவர் அவர் கிடையாது போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோ என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தந்தனர். அதே நேரம் சிலர் ஓவியாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், ‘மேடம் வீடியோ ஒன்னு வந்திருக்கு’, ‘நீளம் கம்மியா இருக்கு’, லிங்க் கிடைக்குமா என்பதை போன்ற கமெண்ட்களை பகிர்ந்தனர்.

இதனை கூலாய் ஹேண்டில் செய்த ஓவியா, ‘என்ஜாய்’, ‘நெக்ஸ்ட் டைம்’ என ரிப்ளே செய்திருந்தார். அவரின் இந்த அணுகுமுறை பலரால் பாராட்டப்பட்டது. அதே சமயம் அந்த வீடியோவில் இருப்பது தான் கிடையாது என்று ஓவியா மறுப்பு தெரிவிக்கவில்லை. அத்துடன் சோஷியல் மீடியாவில் தன்னை விமர்சித்தவர்களையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் இந்த ஆபாச வீடியோ குறித்து காவல்துறையில் நடிகை ஓவியா புகாரளித்துள்ளார். அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும், தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தயார் செய்யப்பட்ட வீடியோ என்றும் அவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்கி, வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஓவியா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *