802 கிலோ எடை இரத்தினக்கல் இலங்கையில் – தலைசுற்றவைக்கும் பெறுமதி..!!

இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.

அதேவேளை பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.

அதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆசியாவின் ராணி” என அழைக்கப்பட்ட சுமார் 310 கிலோ எடை இரத்தினம் கல் ஒன்று இரத்தின புரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய இயற்கையான கொருண்டம் நீல சபையர் அது என கூறப்பட்ட நிலையில் தற்போது 802 கிலோ எடை இரத்தினக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சர்வதேச அரங்கில் இலங்கையின் பாற்சோறு !

Wed Apr 24 , 2024
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து பாராட்டு சென்றுள்ளார். இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டார், நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார். ‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, பால்சோறு மற்றும் இலங்கைகருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை […]

You May Like