இலங்கை எரிபொருள் நிலையத்தில் பாரிய மோசடி..!!

கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் இன்று சீல் வைக்கப்பட்டு, சோதனைக்காக எரிபொருள் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *