சிக்கலில் நடிகை தமன்னா – திடீரென விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..!!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் பெரிய ஹிட் ஆகிறது, படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடக்கிறது.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று அமலாக்கத்துறை தமன்னாவிடம் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரங்களில் நடித்ததாக கூறப்பட்டதன் காரணமாக நடிகை தமன்னாவுக்கு, அசாம் கவுகாத்தியில் இயக்குநரகம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இதன் காரணமாக, நடிகை தமன்னா அவர் பெற்றோருடன் அசாமிற்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். 5 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமன்னாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. வழக்கு தொடர்பாக தான் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *