காசாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேலிய படையினர் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியாவை குறிவைத்துத் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
ஹமாஸ் அந்த பிராந்தியத்தில் மீண்டும் தமது கட்டமைப்புக்களை ஸ்தாபிக்க முனைவதைத் தடுப்பதற்காகவே யுத்த தாங்கிகளுடன் அந்த பிராந்தியத்தை சூழ்ந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.