டிரம்பின் உயிருக்கு ஆபத்து? – துப்பாக்கியுடன் கைதான நபர்…!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டு காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

49 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை ஏற்கனவே டிரம்ப் கலந்துகொண்ட பிரசார பேரணியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தெய்வாதீனமாக உய்ரி தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *