புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் உட்பட இருவருக்கு நேர்ந்த கதி..!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்த விடயம் குறித்து கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவலை நீதவான் ச்சானிமா விஜய பண்டார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்படி, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *