என்னது நாங்க பிரிஞ்சிட்டோமா? ஜோடியாக வந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா – ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த சூர்யா – ஜோதிகா, கடந்த 2006ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் காதலித்த போது சூர்யாவின் அப்பா ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின் பல ஆண்டுகள் கழித்து பச்சைக்கொடி காட்ட, இருவரின் வீட்டாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் நடந்தது.

திருமணமாகி 17 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இருவருக்கும் கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

அதிலும் மும்பை சென்றதும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதாகவும் சோசியல் மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் ஜோடியாக காரில் இருந்து இறங்கி வந்து போட்டோ கலைஞர்களுக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து சென்றனர்.

இப்படி ஜோடியாக இருப்பவர்களை போய் ஏன் விரிசல் என்று பரப்புகிறீர்கள் என்று சூர்யா ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *