அதிக மது போதையில் கங்கனா ரணாவத் – ரகசியத்தை உடைத்த பாடகர் ஜஸ்பிர் ஜாசி..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தன் மனதில் பட்டதை தைரியமாக பேசும் குணம் கொண்ட இவர் பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’, ‘தலைவி’, ‘சந்திரமுகி 2 – ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இந்த படங்கள் அனைத்தும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அரசியலுக்குள் நுழைந்த இவர் பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து தற்போது, எம்.பியாகிவிட்டார்.

இப்போது குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்து வரும் கங்கனா ‘எமர்ஜென்சி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்த படத்தில் துப்பாக்கியால் சுடும் காட்சிகளை நீக்க முடியாது என்று கங்கனா கூறியதால் சென்சார் போர்டு பிடியில் இந்த படம் சிக்கி உள்ளது.

இந்நிலையில், பாடகர் ஜஸ்பிர் ஜாசி கங்கனா குறித்து சில அதிரடி உண்மைகளை பகிர்ந்துள்ளார். அதில், “பஞ்சாப் மக்களை பற்றி கங்கனா தவறாக பேசி வருகிறார். அதனால் அவர் உண்மை முகம் என்னவென்று நான் கூறுகிறேன்.

டெல்லியில் ஒரு நாள் அவர் ஒரு தோழியுடன் எனது காரில் அதிக மது போதையில் இருந்தார். அவருக்கு சுயநினைவே இல்லை, நிலைத்தடுமாறியிருந்தார்.

அந்த அளவிற்கு அவர் அதிக போதை பொருள்களை எடுத்துக்கொண்டதை நான் பார்த்ததில்லை. அவர் சீக்கியர்கள் குறித்து தவறாக பேசுவதை நிறுத்தவில்லை என்றால் நான் அவரை பற்றி பல உண்மைகளை கூறுவேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *