விவாகரத்து எனது சொந்த விடயம்.. அதில் உங்க அரசியலை பண்ணாதீங்க – கொந்தளித்த சமந்தா..!!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு KTR தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர்களிடம் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் பேச்சுக்கு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். நாகார்ஜூனா, நாக சைதன்யா உட்பட பலரும் அவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து இருக்கின்றனர்.

இந்த விவகாரம் பற்றி சமந்தா தற்போது இன்ஸ்டாவில் கோபமாக பேசி இருக்கிறார்.

“என் விவாகரத்து பர்சனல் மேட்டர். யாரும் அதை பற்றி ஊகங்கள் அடிப்படையில் பேச வேண்டாம். நாங்கள் அதை பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்பதற்காக அதை அப்ற்றி தவறாக பேசாதீர்கள்.”

“எங்கள் விவாகரத்து mutual consent அடிப்படையில் தான். அதில் எந்த அரசியல் சதி இல்லை. என் பெயரை உங்கள் அரசியல் பிரச்சனையில் இழுக்காதீங்க.”

“நான் இதுவரை அரசியல் சார்பில்லாமல் தான் இருக்கிறேன், அதே போல தான் இருக்க விரும்புகிறேன்” என சமந்தா காட்டமாகி கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *