மசாஜ் நிலையத்தில் பெண்கள் கூட்டு பாலியல் வன்புனர்வு

பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் அங்கிருந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் மசாஜ் நிலையத்தில் இருந்த ஐந்து பெண்களை அறையொன்றிற்குள் அடைத்து வைத்து அவர்களின் கைத்தொலைபேசிகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் அங்கிருந்த இரண்டு பெண்களை கடத்திச் சென்று, அவர்களை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், யக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *