இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை – ரஷ்யா..!!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் இதனை தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,

நாங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை,நாங்கள் உங்களுக்கு விரிவுரைசெய்வதில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என தீர்மானிப்பது உங்கள் மக்களை பொறுத்தவிடயம் என ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உங்கள் தெரிவை மதிப்போம் நீங்கள் தெரிவு செய்யும் எந்த ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரஸ்ய தூதுவர், புதிய ஜனாதிபதியும் நடுநிலைமை கொள்கைகளை பின்பற்றுவார் ரஸ்யாவுடன் நட்புறவை பேணுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் சமநிலையான,நடுநிலையான வெளிவிவகார கொள்கைக்கு ரஷ்ய தூதுவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *