களனி பல்கலைக்கழகத்தில் விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர விடுதியின் மேல் மாடியில் இருந்தே அவர் கீழே விழுந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.