வேறொரு நடிகையுடன் தொடர்பில் அபிஷேக் பச்சன் – உலக அழகிக்கே இந்த நிலையா?

1994-ல் உலக அழகி பட்டத்தை வென்று இருவர், ஜீன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் ஐஸ்வர்யா ராய். இதன்பின் இந்தியின் காலெடி எடுத்து வைத்து தன் திறமையால் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார்.

கடந்த 2007ல் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய், ஒரு மகள் ஆராத்யாவை பெற்றெடுத்தார். சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபகாலமாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள் என்றும் இருவரும் விவாரத்து பெறவுள்ளார்கள் என்றும் செய்திகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பச்சன் குடும்பத்திற்கு ஐஸ்வர்யா துரதிர்ஷ்டவசமானவர் என்ற பழைய வதந்தி செய்தி ஒன்றும் மீண்டும் பரவி வருகிறது. அதாவது ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் இருந்தது என்றும் அதற்காக முதலில் அவர் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை நடிகர் அமிதாப் பச்சன் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தாய் வீட்டுக்கு மகளுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பின் அந்த நடிகையுடனான தொடர்பை அபிஷேக் பச்சன் கைவிட்டப்பின் ஐஸ்வர்யா மீண்டும் பச்சன் வீட்டிற்குள் நுழைந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது 50 வயதான ஐஸ்வர்யா அதிக எடை போட்டிருக்கிறார், உடல் நல பாதிப்புகளும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *