இளையராஜா பயோபிக் என்னாச்சு?;இதுதான் பிரச்சனையா? – தனுஷ் எடுத்த முடிவு….!!

தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகின்றார் தனுஷ்.

இட்லி கடை படத்தில் தனுஷுடன் இணைந்து இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது.

இதற்கிடையில் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒருபக்கம் இயக்கத்தில் பிசியாக இருக்கும் தனுஷ் மறுபக்கம் பல படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் துவக்க விழாவிலும் மிக சிறப்பாக நடந்தது. அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இளையஜாராவின் பயோபிக் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

ஆனால் அதன் பிறகு இப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.அநேகமாக டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு துவங்க மேலும் சில மாதம் எடுக்குமாம். தற்போது தனுஷ் நடித்து இயக்கி வரும் படங்களின் வேலைகளை முடித்துக்கொண்டு தான் இளையராஜா பயோ பிக்கில் நடிக்கவுள்ளாராம் தனுஷ்.

எனவே டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்காது என்றும்,மேலும் சில மாதங்கள் கழித்து தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இத்தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *