புளோரிடாவை புரட்டிப்போட்ட மில்டன் சூறாவளி – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

அமெரிக்கா புளோரிடாவில் மில்டன் சூறாவளி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சூறாவளியின் தாக்கம் காரணமாக சுமார் 3 மில்லியன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *