லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்…!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் லெபனானுக்கு வேலைக்காகச் சென்ற இலங்கையர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கால அவகாசம் எதிர்வரும் 08-01-2025ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் நிலையை சரிசெய்து கொள்ள முடியுமென வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *