காசா முனையில் 42 ஆயிரமாக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை..!!

காசா முனை மீது இஸ்ரேல் ஓராண்டாக அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் குறித்த தாக்குதலில் இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42,010 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97,720 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழப்பு, காயம் தொடர்பான தரவுகள் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *