தெலுங்கு, கன்னட, தமிழ் மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம் தோரூரில் நடைபெற்ற வணிக வளாக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்ததால் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலுக்கு இடையே அவர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். மேடை சரிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நான் காயமடையவில்லை என்றும், விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.