தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் உடல்நிலைக்கு ஏற்றவாறு அமெரிக்கா சென்று தொழில் தொடங்கி செட்டிலாகினார்.
தன் மகனுக்கு ஏற்றவகையில் வீடு முதல் மற்ற அனைத்தையும் செய்து சிறந்த தந்தை என்று நிரூபித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதற்காக ஜப்பானுக்கு குடும்பத்துடன் கப்பலில் சென்றுள்ளார்.
இந்நிலையில் தன் மகனை விமர்சித்து பேசியவர்களுக்கு உருக்கமான ஒரு பதிலை கொடுத்தும் வேண்டுகோள் வைத்தும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ‘ஒரு பக்க சொல் ஒரு யானை பலம்’. எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். அது ஒருநாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. நன்றாக யோசியுங்கள்.
சிந்தனையை செயல்படுத்துங்கள் என்றும் வாழுங்கள்..! வாழ விடுங்கள்..!. நான் இங்கு போடுகிற ஒவ்வொரு பதிவும் எனது திரையுலகின் நடிப்பையும், நிஜ வாழ்க்கையை பார்த்து ரசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்காக மட்டும்தான். எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என்றும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் தங்களை ஆதரவை நடிகர் நெப்போலியன் பதிவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.