இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கம்மை – நடுங்கும் உலக நாடுகள்!

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

குரங்கு அம்மை தொற்று 116 நாடுகளில் பரவியுள்ளது. எனவே, இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது.

தமிழ்நாட்டிலும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமாணியன் தெரிவித்திருந்தார். அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஒரு இளைஞருக்கு, தற்போது குரங்கு அம்மை தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,

சந்தேகத்திற்கிடமான நோயாளி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *