ராட்சசன் பட தயாரிப்பாளர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு, இவர் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் முதன்முதலில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்த உறுமீன் திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். அதைத்தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள் மற்றும் கள்வன் என பல தரமான திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

அடுத்தடுத்து பல இளம் இயக்குநர்களுக்கு உதவி செய்து வந்த இவர், பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளார். தனது மகன் தேவ்வை ஹீரோவாக வைத்து வளையம் என்ற பெயரில் படத்தை தயாரித்து வந்துள்ளார். மேலும், மிடில்கிளாஸ், யார் அழைப்பது போன்ற படங்கள் தயாரிப்பில் உள்ளன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் டில்லி பாபு உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 12.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 50. கடந்த சில மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சைபலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

டில்லி பாபுவின் உடல் 10.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின் மாலை நான்கு மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் உடலுக்கு திரை பிரபலங்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *