தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, அவரை பார்க்க வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த போது அப்போது விஜய்யின் பெற்றோர்களுக்கு அவரை பிடித்து போக இரு வீட்டாரும் பேசி விஜய் – சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.
சங்கீதாவின் தந்தை இலங்கை சேர்ந்தவர் அந்த சமயத்தில் லண்டனில் மிகப்பெரிய பிசினஸ்மேனாக இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், சாஷா என்கிற மகளும் உள்ளனர்.
இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மகள் – சாஷா லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். இதனால் சங்கீதாவும் லண்டன் சென்று மகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரை விஜய் அவரது மனைவி- சங்கீதாவை தவறாமல் ஆடியோ லாஞ்சு அழைத்து விடுவார்.
ஆனால் அதற்கு பின்னால் வெளியான வாரிசு பட இசை வெளியீட்டு விழா, லியோ சக்சஸ் மீட் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் வரவில்லை.
இதனை கவனித்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் விஜய் மனைவியை பிரிந்து விட்டார் என செய்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டார்.
பின்னர் விஜய் உடன் நடிக்கும் நடிகைகளுடன் உறவில் இருப்பதாக பயில்வான் உள்பட சில பத்திரிகையாளர்கள் வதந்திகளை பரப்பி வந்தனர். மாறாக இந்த சர்ச்சைகளுக்கு நேராக பதில் கொடுக்காமல் மறைமுகமாகவே விஜய் பதிலளித்து வந்தார். கோட் திரைப்படம் இவற்றை முறியடித்துள்ளது.
அந்த வகையில், கோட் பட ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு நடிகர் விஜய் தன்னுடைய குடும்பத்தினருடன் பாடம் பார்க்க வந்துள்ளனர்.
சென்னை – அடையாறில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில் தான் கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
அங்கு, விஜய் மனைவி- சங்கீதா, மகன்- ஜேசன் சஞ்சய், மகள்- சாஷா, தந்தை- எஸ்.ஏ.சந்திரசேகர், தாய்- ஷோபா ஆகியோருடன் கோட் பட இயக்குனர்- வெங்கட் பிரபு, தயாரிப்பாளர்- அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் உடன் இருந்தாக கூறப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய் அமைதியாக இருந்தே காரியத்தை சாதித்து விட்டார் எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.