விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி – நடிகை ரம்பா கூறிய அதிரடியான பதில்..!!

90 – களில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ரம்பா. அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இவர் நடித்து கொண்டிருந்தபோது 2010 – ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரம்பா திருமணத்திற்கு பின் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதனால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டார்.

அண்மையில் கூட, அவர் நடிகர் விஜய்யை அவரது குடும்பத்துடன் சென்று சந்தித்தார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில தினங்களாக ரம்பா மற்றும் அவரது கணவர் விவாகரத்து பெற உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரம்பா பதிலளித்துள்ளார்.

அதில், “நானும் என் கணவரும் விவாகரத்து பெற இருப்பதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது.

கணவன் மனைவி என்றால் சண்டை இருப்பது சாதாரண ஒரு விஷயம் தான் அதை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது. நாங்கள் எங்கள் குழந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *