ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை சல்லடை போட்டு தேடும் பொலிஸார்; காதலி வீட்டையும் விட்டுவைக்கவில்லை!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்து , அசெம்பிள் செய்து பாவித்த BMW சொகுசு கார் பாவனை தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்ய வருமாறு கோரிய போதும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்க வரவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வராததால் , அவரை தேடி சந்தேகத்திற்கிடமான 6 வீடுகளில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு வீடுகள் இருப்பதாகவும், பல சர்ச்சைகளுக்கு உள்ளான அவரது கள்ள காதலி என அறியப்படும் ஒருவரது வீடும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதியின் உதவியுடன் தலைமறைவாக உள்ளதாக சிஐடிக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *