பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.