ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் பங்கேற்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவை நினைவு கூரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று திறந்து வைக்கப்பட்ட நடைபாதை நாளை (10) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை (10) முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குறித்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள நுழைவின் ஊடாக பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் குறித்த பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(படங்கள் – சீன தூதரகம்)