இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவன தலைவர் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு சுமார் 6-7 எரிவாயு கப்பல் ஏற்றுமதிகள் வருகை எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை நிறுவனம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக தலைவர் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் நெருக்கடி முழுமையாக தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்று அவர் கூறினார்.