ச.தொ.ச.வினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு வவுச்சருக்கான பொருட்களை வழங்குவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜா-எல பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு ஜா-எல பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது.