நேற்று முன்தினம் (03) மாத்திரம் நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,727 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,536 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,755ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 284,524 போ் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.