கல்வி அமைச்சின் செயலாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது ஆசிரியர்களை மெருட்டும் செயற்பாடாகும். இணையவழி வசயில்லாத ஏராளமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடு நடைபெறுகின்றது. அதற்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.
இதுவொரு மாணவர் நலன் சார்ந்த விடயம். அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசியர்கள் மாணவர் இல்லாதவேளையும் பாடசாலையில் இருக்கவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்திருப்பதும் வருகைதராத அதிபர், ஆசிரியர்களுக்கு சொந்த லீவில் கழிக்கப்படும் என்பதும் அதிபர், ஆசிரியர்களை மெருட்டும் செயற்பாடாகவே நாம் பார்க்கிறோம்.
தூர இடங்களில் வதியும் அதிபர் ஆசிரியர்கள் பிள்ளைகள் இல்லாமல் பாடசாலைக்கு ஏன் செல்ல வேண்டும். எத்தனை நாட்களுக்கு இப்படி செல்வது.
கொரோனா அபாயம் ஒரு புறம் செயலாளரின்அச்சுறுத்தல் மறுபுறம்.
எது எப்படியோ ஆசிரியர்கள் தமக்கான லீவினை தமது அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துவதை விடுத்து, கல்வி அமைச்சின் செயலாளர் கட்டாய லீவு வழங்கி பின்னர் பதவி வெறிதாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.