தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த 25ம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் மே 2ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.