புசல்லாவை, உடகம அமுனுவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுவனொருவர் காணாமல் போயுள்ளார்.
கம்பளை – நவோதவிட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவனே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீராடச் சென்று காணாமற்போன சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனது நண்பருடன் நேற்று மாலை நீராடச் சென்ற சிறுவனே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற பகுதியில் இருவரும் நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.