கொவிட் நிலைமைக்கு மத்தியில், எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.
இதன்படி, உள்ளக அரங்குகளில் திருமண நிகழ்வுகளை 50 பேருடன் நடத்துமாறும், வெளியக பகுதிகளில் 75 பேருடன் நடத்துமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொவிட் அல்லாத மரண வீடொன்றில் அதிகபட்சம் 20 பேர் இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 வீதமான பார்வையாளர்களுட், எதிர்வரும் 21ம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.