பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் (BIA) விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் உயர்தர பயணிகளுக்கு premium விமான நிலைய அனுபவத்தை வழங்குவதற்காக Golden Route” வருகை ஓய்வறை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்த புதிய சேவையானது நாட்டிற்கு கூடுதல் வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கு பங்களிக்கும் என அவர் தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலையங்கள் தங்கள் பிரீமியம் பயணிகளுக்கு பிரத்யேக பயணிகள் சேவைகளை வழங்குகின்றன, குறிப்பாக விமான நிலையங்களில் பிரீமியம் சேவைகளை எதிர்பார்க்கும் உயர் நிகர மதிப்புள்ள நபர்களுக்கு இது உதவும்.
அதிக வருமானம் பெறும் விமானப் பயணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள், சுங்கச் சோதனைகள், உணவு மற்றும் தகவல் தொடர்புத் தேவைகள் போன்ற விமான நிலைய நடைமுறைகளைச் செய்ய வரிசையில் நிற்காமல் இந்தப் பாதையை அணுகலாம்.
தற்போது, வணிகரீதியாக முக்கியமான பயணிகளுக்கு Silk Route Service facility மட்டுமே பண்டாரநாயக்க விமான நிலையம் வழங்குகிறது, இந்த வசதிகளைப் பெற தற்போது ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படுகிறது.
Golden Route” இந்த புதிய சேவையானது நாட்டிற்கு கூடுதல் வெளிநாட்டு நாணயத்தை ஈட்ட உதவும். இதில்
புதிய சேவை வசதியானது பயணிகளுக்கு US$200 (ஒரு வருகை அல்லது புறப்பாடு) கட்டணத்தில் வழங்கப்படும் இதனை www.airport.lk மூலம் முன்பதிவு செய்யலாம்.