• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, September 22, 2023
  • Login
Thedal Media
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
Thedal Media
No Result
View All Result
Home International News

பாகிஸ்தானில் எரித்து படுகொலை செய்யப்பட்ட மேலாளர் பிரியந்த குமார முழுவிபரம்

by Roshan
2 years ago
in International News
Reading Time: 1 min read
A A
பாகிஸ்தானில் எரித்து படுகொலை செய்யப்பட்ட மேலாளர் பிரியந்த குமார முழுவிபரம்
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் – சியால்கோட்டில் வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த கனேமுல்லயைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதன என்பவரை கடுமையாகத் தாக்கி நடுவீதியில் எரித்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் ( TLP) என்ற அமைப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

எரித்து படுகொலை செய்யப்பட்ட மேலாளர் பிரியந்த குமார தியவதன 40 வயது திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது சியால்கோட் மாவட்டம். இங்குள்ள ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸில் ஆடைத் தொழிற்சாலையின் பொது மேலாளராக பணியாற்றினார்.

? நடந்த சம்பவம்

இவர் கடமையாற்றிய தொழிற்சாலையில் உள்ள தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” என்ற அரசியல் அமைப்பின் போஸ்டரை அவர் கிழித்து, குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது. அந்த போஸ்டர் அவரது அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. அதை அவர் கிழித்த போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இருவர் அதனை பார்த்துள்ளனர். பின்னர் அந்த தகவல் செவி வழி செய்தியாக பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சிலர் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்க ஆதரவாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இது “மத நிந்தனை” செயல் என்று தூண்டிவிடப்பட்டு நூற்றுக்கணக்கானோர் தொழிற்சாலைக்கு வெளியே திரண்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆவார்.

தொடர்ந்து பிரியந்த குமாரவை தொழிற்சாலையில் இருந்து இழுத்து வந்த இந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பிரியந்த குமார சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு, பொலிசார் அங்கு செல்வதற்குள் அந்த கும்பல் அவரது உடலை நடுரோட்டில் வைத்தே எரித்ததுள்ளனர்.

? தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்கத்தின் அமைப்பு

இந்த கொலையின் பின்னணியில் TLP என்ற அமைப்பு தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாகும், இது நாட்டில் தீவிரவாத இஸ்லாமியக் குழுவாகக் கருதப்படுகிறது.

இது 2015 இல் நிறுவப்பட்ட ஒரு சுன்னி முஸ்லிம் அமைப்பு.

பிரியந்த படுகொலை செய்யப்பட்ட காணொளியில், படுகொலையுடன் தொடர்புடைய சிலர் TLP கோஷங்களை உச்சரிப்பது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

? தடை நீக்கம்.

இம்ரான் கானின் அரசாங்கம் TLP ஐ தடை செய்து பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட முடிவு செய்தது. அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, TLP கடந்த ஒக்டோபரில் லாகூரில் வன்முறை மோதல்களை உருவாக்கியது, குறைந்தது ஆறு பொலிஸ் அதிகாரிகளைக் கொன்றது.

இந்த மோதல்களை எதிர்கொண்டு, அரசாங்கம் ஒரு படி பின்வாங்கி, TLP மீதான தடையை நீக்க முடிவு செய்தது.

? பின்னணி

TLP சம்பந்தப்பட்ட குற்றம் இது முதல் சம்பவம் அல்ல, கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறி முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிவைத்து பல கொலைகள் நடந்துள்ளன.

கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக வெறும் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வன்முறையைத் தூண்டி விடப்படுகின்றன. மேலும், மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலர் சமீப வருடங்களில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

?பிரியந்த குமார தியவதன

பிரியந்த குமார தியவதன 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்றிருந்தார்.

1993 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்திப் பொறியாளராக இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.

2010 இல், பாகிஸ்தான் Crescent Textile Garment Factory தொழில்துறை பொறியியல் மேலாளராக சேர்ந்தார்.

அவர் 2012 இல் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸில் (Rajco Industries) சேர்ந்தார். இதன் பொது மேலாளராக இருந்துள்ளார்.

பிரியந்த கனேமுல்லை – வெலிபிஹில்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவரது இரண்டு மகன்களும் 14 மற்றும் 9 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது

?பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விசாரணைகளை தாம் தனிப்பட்ட முறையில் கவனித்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். “சியால்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்” என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

? பஞ்சாப் மாநில முதல்வர் கண்டனம்.

பஞ்சாப் மாநில முதல்வர் உஸ்மான் Buzdar விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

?ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கண்டனம்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு அரசாங்கமும் நீதி வழங்கப்படுவதையும் எஞ்சியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என நமப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத கும்பல் நடத்திய காட்டுமிராண்டித் தனமான மற்றும் கொடூரமான தாக்குதலைக் கண்டு இலங்கை அதிர்ச்சியடைகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

ShareTweetShare

Similar News

ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம்
International News

ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம்

June 25, 2023
13
திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
International News

திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

June 9, 2023
46
செக்ஸ் ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது சுவீடன்
International News

செக்ஸ் ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது சுவீடன்

June 6, 2023
107
எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது
International News

எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது

June 5, 2023
33
விசா காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர்
International News

விசா காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர்

May 30, 2023
7
சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.
International News

சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

May 30, 2023
8
  • Trending
  • Comments
  • Latest
லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

October 11, 2021
ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

October 11, 2021
கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

October 10, 2021
நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் l அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

October 12, 2021
இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள. ?இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின்   வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஜுலை 6 வரை விளக்கமறியல்.

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

September 21, 2023

Leading Ashley Madison Alternatives Value Attempting in 2023

September 12, 2023

Czech Girls Dating: Satisfy Tender, Beautiful, and Hot Females

September 12, 2023

Join the senior lesbian dating community today

September 12, 2023

Recent News

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

September 21, 2023
10

Leading Ashley Madison Alternatives Value Attempting in 2023

September 12, 2023
0

Czech Girls Dating: Satisfy Tender, Beautiful, and Hot Females

September 12, 2023
1

Join the senior lesbian dating community today

September 12, 2023
1
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
report@thedalmedia.com

All rights reserved © 2022 Thedal Media

No Result
View All Result

All rights reserved © 2022 Thedal Media

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?