அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை அழைப்பதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் நாட்டை மூடுவது பற்றி நாம் பேசக்கூடாது. நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.