பெரேராவின் கீழ் இருந்த பல திணைக்களங்களை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் திருத்தியமைக்கப்பட்டு, விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேராவுக்கு ரத்னாலங்கா பாதுகாப்பு நிறுவனம், முதலீட்டுச்சபை மற்றும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஆகியவற்றின் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அந்த பொறுப்புக்கள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியின் கீழ் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன.