கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களை பேரவாவிக்குள் தள்ளி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஒருவராவார். குறித்த சந்தேக நபர் உறுப்பினர் ஒருவரை தாக்கி பேரவாவிக்குள் தள்ளிவிட்டு பணப்பையை கொள்ளையடித்து சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.