20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள 99,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பலுக்கு 7 மில்லியன் டொலர்கள் / 2500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை வழங்க நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் நிதியமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கப்பல் நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை லட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும் என்று கூறிய அதிகாரி, அதன்படி கப்பல் தாமதக் கட்டணமாக 30 லட்சம் டொலர்கள் அதாவது 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை யூரல் கச்சா எண்ணெய் தரமற்றது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் இதுபோன்ற கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு எரிசக்தி துறையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.