இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து ஒருவருமாக 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 77 கைதிகளும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 93 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.