சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (20) மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்படுவதாகவும், அடுத்த வாரம் 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற எதிர்பார்க்கிறது என்றும் கூறினார்.
இந்த இரண்டு சரக்குகள் மூலம், சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் செயல்பட முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று இரவு விமான எரிபொருள் சரக்குகள் இறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.