எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் விலை மற்றும் கோழி தீவன விலை அதிகரிப்பு காரணமாக இன்று ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு மட்டும் 31 ரூபாவாக அதிகரித்துள்ளது. கோழி தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.விவசாயி இந்தத் தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாவுக்கு விற்க வேண்டும்,” என்றார்.